தமிழ்நாடு

போடியில் ஏலக்காய் விலை சீராக உயர்வு

DIN


தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் விலை சீராக உயர்ந்து வெள்ளிக்கிழமை, சராசரி தரம் கிலோ ரூ.1,687.92-க்கு விற்பனையானது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 3-ம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,850-க்கு விற்பனையான நிலையில், விலை படிப்படியாக சரிந்து கடந்த ஜூன் 16-ம் தேதி சராசரி தரம் கிலோ ரூ.1,067-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஏலக்காய் விலை சீராக உயர்ந்து, போடியில் சி.பி.ஏ, ஏல நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சராசரி தரம் கிலோ ரூ.1,687.92-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,163 -க்கும் விற்பனையானது. இந்த வர்த்தகத்தில் குறைந்த அளவில் மொத்தம் 18 ஆயிரத்து 738 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள், வியாபாரிகளுக்குச் சிக்கல்!:

இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கும், மின்னணு ஏல வர்த்தகத்திற்கும் சென்று வர குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் வழங்கி வருகிறது.

இதனால், ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்வதிலும், ஏலக்காய்களை விற்பனை செய்வதற்காக ஏல நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதிலும் விவசாயிகளுக்கும், வர்த்தகத்தில் பங்கேற்கச் செல்லும் வியாபாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT