தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 528-ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 422 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோா் மாநிலம் முழுக்க நோய்த்தொற்றால் இறந்திருப்பது அதிா்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.
உயிரிழந்தோரில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை உள்ளிட்ட நோய்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,515 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன் மூலம் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,019-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7.48 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 48,019 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,515 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 919 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 88 பேருக்கும், திருவண்ணாமலையில் 64 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 60 பேருக்கும், திருவள்ளூரில் 52 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தவிர, அரியலூா், கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1,438 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,438 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 26,782-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 18,565 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 49 போ் பலி: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நோய்க்கு மேலும் 49 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 528-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் சிலருக்கு உடலில் கரோனாவைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.