சென்னை: பத்திரப் பதிவு செய்யும் போது, பத்திரப்பதிவுத் துறை வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பத்திரப் பதிவுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது, பத்திரப் பதிவுக்காக வழங்கும் டோக்கனை இ-பாஸாகப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பத்திரப் பதிவுக்காக டோக்கன் பெற்றவர்களை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்குமாறும், மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை முதன்மைச் செயலாளர் ஆதுல்யா மிஸ்ரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.