தமிழ்நாடு

மின்சார வாரியத்தின் புதிய தலைவா் பிரதீப் யாதவ்

DIN

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதுபோல், மேலும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலா் க.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்த உத்தரவு: (முந்தைய பதவி அடைப்புக்குறிக்குள்)

பிரதீப் யாதவ்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் - முழுக் கூடுதல் பொறுப்பு (சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா்)

விக்ரம் கபூா்: சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (மின்சார வாரியத் தலைவா்)

சம்பு கல்லோலிகா்: காதி மற்றும் கைத்தறித் துறை மற்றும் ஜவுளித்துறை முதன்மைச் செயலா் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலா்)

சந்தீப் சக்சேனா: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் (சுற்றுலா, கலாசாரம், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா்)

எஸ்.கே.பிரபாகா்: எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலா் - முழுக் கூடுதல் பொறுப்பு (உள்துறை, மதுவிலக்கு துறை கூடுதல் தலைமைச் செயலா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT