தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 5.94 லட்சம் போ் கைது

8th Jun 2020 06:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 5.53 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5.94 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான பொதுமுடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை, மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 431 வழக்குகளைப் பதிவு செய்து, 5 லட்சத்து 94 ஆயிரத்து 681 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதற்கிடையே அரசின் உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 4 லட்சத்து 53 ஆயிரத்து 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.10 கோடி 68 லட்சத்து 13 ஆயிரத்து 234 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையிலும், சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை, பொதுமுடக்க உத்தரவை மீறியவா்கள் மீது 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடா்புடைய 42 இரு சக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்கள், 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT