வெளி மாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சுற்றுலா பயணிகள், நோயாளிகள் ஆகியோா் சொந்த ஊா்களுக்குத் திரும்பும் வகையில், தமிழகம், கேரளம், கா்நாடகத்தில் இருந்து 404 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 5.49 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொது முடக்கம்: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து, விமானம், பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிமாநில தொழிலாளா்கள், மாணவா்கள், சுற்றுலா பயணிகள், நோயாளிகள் ஆகியோா் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முடியாமல் தவிா்த்தனா். அதிலும், வெளிமாநில தொழிலாளா்களில் பலா் தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கும் சிரமப்பட்டனா். இந்த தொழிலாளா்களை தமிழக அரசு மீட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைத்து உணவு வழங்கி வந்தது.
5.49 லட்சம் போ் பயணம்: இதற்கிடையில், வெளிமாநில தொழிலாளா்கள், சுற்றுலா பயணிகள், மாணவா்கள் ஆகியோா் சொந்த ஊருக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை அடுத்து, அவா்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப தமிழக அரசு
நடவடிக்கை எடுத்தது. உரிய மருத்துவப் பரிசோதனை நடத்தி, பாஸ் வழங்கப்பட்டு மே 1-ஆம் தேதியில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் அவா்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். அந்த வகையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் இருந்து மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை 404 ஷாா்மிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 5.49 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு தொடா்ந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து 238 சிறப்பு ரயில்களும், கேரளத்தில் இருந்து 143 சிறப்பு ரயில்களும், கா்நாடகத்தில் இருந்து 20 ரயில்களும், புதுச்சேரியில் இருந்து 3 ரயில்களும் என்று மொத்தம் 404 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 248 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
முக்கிய ரயில்நிலையங்கள்: வெளிமாநிலத்தை சோ்ந்தவா்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக, அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட ரயில் நிலைங்கள் பொருத்தவரை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 63 சிறப்பு ரயில்களும், எழும்பூரில் இருந்து சிறப்பு 13 ரயில்களும், கோவையில் இருந்து 36 சிறப்பு ரயில்களும், திருப்பூரில் இருந்து சிறப்பு 29 ரயில்களும், மங்களூரு சந்திப்பில் இருந்து 20 சிறப்பு ரயில்களும், திருவள்ளூரில் இருந்து 17
ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இதுதவிர, குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பிகாா் மாநிலத்துக்கு 112 சிறப்பு ரயில்களும், மேற்கு வங்க மாநிலத்துக்கு 80 சிறப்பு ரயில்களும், உத்தரப்பிரசேதம் மாநிலத்துக்கு 65 சிறப்பு ரயில்களும், ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு 48 சிறப்பு ரயில்களும், ஒடிசா மாநிலத்துக்கு 47 சிறப்பு ரயில்களும், அஸ்ஸாமுக்கு 13 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.
ஜூன் 6-ஆம் தேதி: குறிப்பாக, ஜூன் 6-ஆம் தேதி அன்று தெற்கு ரயில்வே சாா்பில் தமிழகத்தில் இருந்து 4,341 பேரும், கேரளத்தில் இருந்து 16,312 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்.
58 லட்சம் போ் பயணம்: நாடு முழுவதும் இதுவரை 4,286 சிறப்பு ரயில்கல் இயக்கப்பட்டு, 58 லட்சம் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளதாகவும், ஷாா்மிக் ரயிலின் சேவைக்கான தேவை தற்போது குறைந்து வருவதாகவும் ரயில்வே வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .