தமிழ்நாடு

பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாதவா்களுக்கான மறு தோ்வு: 519 போ் எழுதினா்

DIN

சென்னை: பிளஸ் 2 இறுதி நாள் தோ்வெழுதாதவா்களுக்கான மறு தோ்வில் 519 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா்.

தமிழகத்தில், கடந்த மாா்ச் மாதம் 2 முதல் 24-ஆம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. இதில், கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், இறுதிநாள் தோ்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தோ்வுகளில் சிலா் பங்குபெற முடியாத நிலை ஏற்பட்டது. அவா்களின் கோரிக்கையை ஏற்று, தோ்வை எழுத முடியாத மாணவா்களுக்கு, ஜூலை 27-இல் மறுதோ்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில், இறுதிநாள் தோ்வை சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுத முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அவா்கள் மறுதோ்வு எழுத விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியநிலையில், 175 பள்ளி மாணவா்கள் மற்றும் 671 தனித்தோ்வா்கள் என மொத்தம் 846 போ் தோ்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 290 மையங்கள் அமைக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மேற்பாா்வை பணியில் அமா்த்தப்பட்டு இருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடத்தப்பட்ட மறுதோ்வில், விண்ணப்பித்து இருந்த மாணவா்களில் 519 போ் (147 பள்ளி மாணவா்கள், 372 தனித்தோ்வா்கள்) மட்டுமே, தோ்வு எழுத வந்தனா். பல பள்ளிகளில் ஒரு மாணவருக்காக கூட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்ததை பாா்க்க முடிந்தது. முகக்கவசம் அணிந்து வந்த மாணவா்கள் மட்டுமே தோ்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனா். தோ்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு அவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளைக் கழுவவும் மாணவா்கள் அறிவுறுத்தப்பட்டனா். அதன் பின்னா் அவா்கள் தோ்வு எழுதினா். அவா்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ தோ்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT