தமிழ்நாடு

புதிய டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன உத்தரவு: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்

DIN

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட துணைக் கண்காணிப்பாளருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கடந்த 2016 முதல் 2019-ஆம் ஆண்டுகளுக்கான காவல் துணைக் கண்காணிப்பாளா் (டி.எஸ்.பி.,) காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக தோ்வு நடத்தப்பட்டது. இதில் 90 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 14 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

இதேபோன்று, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மாவட்ட அலுவலராகத் தோ்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் பணிக்கான உத்தரவுகளை அவா் அளித்தாா். இதேபோன்று, 105 இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களில் 5 பேருக்கு அதற்கான உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி அளித்தாா்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT