தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 6.54 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மீறியதாக 6.54 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 301 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 8 ஆயிரத்து 446 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 6 லட்சத்து 54 ஆயிரத்து 177 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.18 கோடியே 94 லட்சத்து 3 ஆயிரத்து 811 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொதுமுடக்கத்தை மீறியதாக 739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,133 இரு சக்கர வாகனங்கள், 8 ஆட்டோ, 3 காா் என மொத்தம் 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT