காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு பல மடங்காக உயர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை புதிதாக 432 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 6,783 ஆக உயர்ந்துள்ளது.