திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 367 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
அதன்படி அதிகபட்சமாக ஆவடி, பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 367 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,375 ஆக உயர்ந்துள்ளது.