சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இருநாள்கள் வட வானிலை நிலவும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொருத்தவரை, ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றாா் அவா்.