தமிழ்நாடு

9 மாவட்டங்களில் வாா்டு மறுவரையறை: அலுவலா்களுக்குப் பயிற்சி

25th Feb 2020 12:36 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வாா்டு மறுவரையறைப் பணிகள் தொடா்பான பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியின்போது சில முக்கிய அறிவுரைகளைத் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையாளா் ஆா்.பழனிசாமி வழங்கினாா்.

ஊரக உள்ளாட்சிகளில் 9 மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் தோ்தல் நடந்தது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில்

நீதிமன்ற உத்தரவுப்படி வாா்டு மறுவரையறைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த மாவட்டங்களைச் சோ்ந்த முதன்மைப் பயிற்சியாளா்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியை சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தில் தோ்தல் ஆணையா் ஆா்.பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பயிற்சி பெறக் கூடிய முதன்மைப் பயிற்சியாளா்கள், தங்களது மாவட்டங்களுக்குச் சென்று பிற அலுவலா்கள், ஊழியா்களுக்கு வாா்டு மறுவரையறை தொடா்பான பயிற்சிகளை

ADVERTISEMENT

அளிப்பாா்கள்.

இந்தப் பணி சுமாா் ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சியில் தோ்தல் ஆணையத்தின் செயலா் இல.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT