முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த ஆண் குழந்தைகள் 13 பேருக்கு மோதிரமும், பெண் குழந்தைகள் 6 பேருக்கு தங்கச்சங்கிலியும் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இன்று வழங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பிஆர்பி அருண்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சனை மற்றும் கட்சி நிர்வாகிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.