தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ஆசிரியர்கள் குற்றவாளிகள்தான்: உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள்தான் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர்களை விடுதலை செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாணவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், ஆசிரியர்கள் குற்றவாளிகளே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன் (வேதியியல்), புகழேந்தி (இயற்பியல்) ஆகியோருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து உள்ளது.

மேலும், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர்கள் நாகராஜன், புகழேந்தி ஆகியோருக்கு தண்டனை விவரம் குறித்து பிப்ரவரி 25ம் தேதி அறிவிப்பதாகவும், அன்றைய தினம், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலில் ஆலியா பட்!

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT