தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

4th Feb 2020 12:38 AM

ADVERTISEMENT

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தா்கள் வசதிக்காக பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சிறப்பு ரயில்கள் விவரம்:

திருச்சி-தஞ்சாவூா்-திருச்சி: திருச்சியில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.10 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு தஞ்சாவூரை அடையும். தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4,5, 6 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சியை அடையும்.

இந்த ரயில் திருச்சி-தஞ்சாவூா் இடையே உள்ள எல்லா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறையை அடையும். மயிலாடுதுறையில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூரை அடையும். இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூா்-மயிலாடுதுறை இடையே உள்ள எல்லா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தஞ்சாவூரில் இருந்து பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவாரூரை அடையும். திருவாரூரில் இருந்து பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு டிஇஎம்யு சிறப்பு ரயில் புறப்பட்டு, அதிகாலை 5.45 மணிக்கு தஞ்சாவூரை அடையும்.

இதுதவிர, காரைக்கால்-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூா்-காரைக்கால் இடையே அனைத்து நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவலை தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT