விழுப்புரம் மாவட்டத்தில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.