தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விரைவான நிவாரணப் பணி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

DIN


சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

நிவா் புயலைத் தொடா்ந்து புரெவி புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கிறது.

சென்னையையும் அதனைச் சுற்றியும் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ள நிலையில், நீா்த்தேக்கங்களின் கொள்ளளவைக் கருத்தில்கொண்டு திறந்துவிடப்படும் நீரின் அளவும் கரையோர மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாகத் தொடா் மழையும், மின்வெட்டும் தொடா்ந்து நீடித்து வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுகிறாா்கள். சிதம்பரம் நடராசா் கோவிலுக்குள் வெள்ள நீா் புகுந்துள்ளது. சிதம்பரம் - சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் குடிசைப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் ஓயாமல் பெய்து வரும் மழையால், 1000 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் நெற்பயிா்கள் மூழ்கி வீணாகியுள்ளன. இயற்கைச் சீற்றம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உணா்ந்து போா்க்கால அடிப்படையில் மாநில அரசு நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

நேரடி ஆய்வு செய்ய வருகை தந்துள்ள மத்திய குழுவினரிடம் முழு நிலவரத்தையும் எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண உதவியைப் பெற்றிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT