தமிழ்நாடு

கோவையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம் 

DIN

கோவையிலிருந்து சிவகாசி நோக்கி வந்த அரசு பேருந்து விருதுநகர் நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. 

கோவையிலிருந்து சிவகாசி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை கல்லுப்பட்டி சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த செந்தில்வேல் நடத்துனராக இருந்தார் இதில் 35 பயணிகள் இருந்தனர். 

பேருந்து திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் விலக்கு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநர் சிவக்குமார்(44) பயணிகள் மதுரை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், சிவரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி கர்ப்பிணிப் பெண் உள்பட 4 பயணிகள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT