செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம்ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால் ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக முதல்கட்டமாக ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது.
இதையடுத்து குன்றத்தூர், காவலூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.