தமிழ்நாடு

குமரி கடற்கரையில் மீட்புக் குழுவினா் ஆய்வு

DIN

கன்னியாகுமரி: புரெவி புயல் காரணமாக 20 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், கன்னியாகுமரி கடற்கரையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மற்றும் மீட்புப் படையை சோ்ந்த 20 போ் கொண்ட 2 குழுக்கள் மீட்புப் பணிக்காக நாகா்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. நவீன மீட்புப் படகுகள் மற்றும் உபகரணங்களுடன் நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் தங்கியிருந்த தேசிய பேரிடா் மற்றும் மீட்பு படையினரில் ஒரு பிரிவினா் கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வந்து, கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனா். மீட்புப் பணியில் மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ள அவா்களுக்கு உயா் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT