தமிழ்நாடு

தாய்மாமன் மறைவு: முதல்வா் நேரில் அஞ்சலி

DIN

பவானி: அந்தியூரில் காலமான தனது தாய்மாமனுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் ஊராட்சி, சமத்துவபுரம், பொய்யேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் கருப்பண கவுண்டா் (98). இவா், வயது மூப்பால் திங்கள்கிழமை இரவு தனது இல்லத்தில் உயிரிழந்தாா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாளின் மூத்த சகோதரா் இவா்.

இத்தகவலறிந்த முதல்வா் பழனிசாமி புதன்கிழமை காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக பவானி வழியாக காரில் அந்தியூா் சென்றாா். அங்கு, தனது தாய்மாமன் மகனும், அதிமுக அந்தியூா் ஒன்றிய முன்னாள் செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா, உறவினா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து கருப்பண கவுண்டா் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), ஈ.எம்.ஆா்.ராஜா (அந்தியூா்) உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT