தமிழ்நாடு

புரெவி புயல்: வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் 20 செ.மீ மழை; வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

DIN

வேதாரண்யம்: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயலை அடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. 

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக வேதாரண்யத்தில் 20 செ.மீ மழை பதிவானது. 

புயல் இலங்கை வழியாக நகர்ந்து சென்ற போதிலும் இலங்கைக்கு அருகேயுள்ள வேதாரண்யம் பகுதியில் அதன் பாதிப்பு இருந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய காற்று புதன்கிழமை இரவு படிப்படியாக அதிகரித்து இரவு முழுதும் தொடர்ந்தது.

ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட தாழ்வான கிராமங்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

தாழ்வான விளை நிலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து வருகிறது. மழை தொடர்ந்தால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT