தமிழ்நாடு

சென்னையில் கரோனா நிலவரம்: தொடர்ந்து 2% ஆக நீடிக்கும் நோயாளிகள் விகிதம்

DIN

சென்னை: சென்னையில் தொடர்ந்து பல வாரங்களாக கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாகவே நீடித்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் 3,584 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த வாரம் வரை கோடம்பாக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 369 ஆகக் குறைந்தது. அதேவேளையில் அடையாறில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கடுத்த இடத்தில் அண்ணாநகரில் 370 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,584 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 2% ஆகும்.

சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2,16,119 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2,08,678 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,857 பேர் பலியாகியுள்ளனர். இது 1.78 சதவீதமாகும். 

கரோனா பாதித்தவர்களில் 60.95 சதவீதம் பேர் ஆண்கள், 39.05 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

அம்பத்தூர், திருவிகநகர், அண்ணநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் 300க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டல வாரியாக கரோனா நிலவரம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT