தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நிஹாங் சீக்கியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் தில்லியில் கடந்த 8 நாள்களாக போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிஹாங் சீக்கியர்கள் தில்லி-ஹரியாணா எல்லையில் நடைபெற்ற போராட்டக் களத்தில் இணைந்தனர்.
அப்போது அரசு கறுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்த அவர்கள் இல்லையேல் நாங்கள் தொடர்ந்து இங்கேயே இருந்து விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம் எனத் தெரிவித்தனர்.