திருச்செந்தூர்: புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவடைந்துள்ளதால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே புரெவி புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் வண்ணம் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.