தமிழ்நாடு

தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை: ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ்

DIN


திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனான சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸுக்கான மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு தினேஷ் குண்டுராவ் மற்றும் கே. எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:

"ராகுல் காந்தியின் தமிழக வருகையின்போது, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது. இதுதான் இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது. 

தொகுதிப் பங்கீடு குறித்து இந்த சந்திப்பில் பேசப்படவில்லை.

ராகுல் காந்தியின் வருகை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும்" என்றார் குண்டுராவ்.

தொடர்ந்து பேசிய கே. எஸ். அழகிரியும் இதே கருத்தை தமிழில் விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT