சிங்காரப்பேட்டை அருகே கிராம சேவை மைய கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டு என்று பத்து ரூபாய் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் கடந்த 2014-2015ம்ஆண்டு மகாத்ம காந்தி தேசியவேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 13.12லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டடம் அரசால் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லை. மக்கள் வரிபணத்தில் கட்டப்பட்ட கட்டடம் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இக்கட்டடத்தை மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவந்து திறப்புவிழா காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.