தமிழ்நாடு

கிராம சேவை மையக் கட்டடம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை

DIN

சிங்காரப்பேட்டை அருகே கிராம சேவை மையக் கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர பத்து ரூபாய் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி ஜெ.ஜெ.நகர்ப் பகுதியில் கடந்த 2014-15ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டடம் அரசால் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்திற்கு மின்சார வசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லை. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுத்து இக்கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து திறப்புவிழா காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT