தமிழ்நாடு

பாமக போராட்டம்: தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை நிறுத்தம்

DIN

பாமகவினரின் போராட்டத்தால் சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

வன்னியர் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வெளிமாவட்டங்களில் இருந்து பெருங்களத்தூர் வந்த பாமகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் ரயில் மீது பாமகவினர் கற்களை எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து பாமகவினர் சென்னைக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு தாம்பரத்தில் இருந்து சென்னைக்குள் வரும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, பாமகவினர் போராட்டத்தால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT