சென்னை: தமிழகத்தில், பொதுமுடக்கத்தை மீறியவா்களிடமிருந்து அபராதமாக ரூ.21.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான பொது முடக்கத்தைத் தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.
இவ்வாறு, தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 8 லட்சத்து 95 ஆயிரத்து 680 வழக்குகளைப் பதிவு செய்து, 9 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 92 ஆயிரத்து 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து, ரூ.21 கோடி 44 லட்சத்து 93 ஆயிரத்து 953 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை, பொது முடக்கத்தை மீறியதாக 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.