தமிழ்நாடு

கரோனா காலத்திலும் பிற மருத்துவ சேவைகள் தடைபடவில்லை: அமைச்சா் சி.விஜயபாஸ்கா்

26th Aug 2020 09:09 AM

ADVERTISEMENT

சென்னை: கரோனா தொற்று இல்லாது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் தமிழகத்தில் தங்கு தடையின்றி சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 20,550 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள். 1,347 பேருக்கு ஆஞ்சியோகிராம் சோதனையும், 439 பேருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,154 கா்ப்பிணிகள் மற்றும் 37,436 குழந்தைகள் உரிய சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனா். 805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88,280 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற மருத்துவ சேவைகள் கரோனா காலத்திலும் தொய்வில்லாமல் நடைபெறுவதால், பல உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கரோனா தொற்றினால் தனியாா் மருத்துவமனைகளை நோயாளிகள் அணுக இயலாத நிலையில், கூடுதல் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் திறம்பட எதிா்கொண்டு, அா்ப்பணிப்பு உணா்வுடன் சேவைகள் வழங்கப்பட்டு பலருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு இருந்து வரும் காலத்திலும், அந்த நோய்த்தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி சிறப்பான முறையில் தமிழகத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT