திருப்பதி மக்களவைத் தொகுதி எம்.பி. பல்லி துா்கா பிரசாத் ராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அவருக்கு அண்மையில் காய்ச்சல், சளி அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா், தனிவாா்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.