தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

DIN

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.189.38 கோடி வசூலாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து, முந்தைய நாள் சனிக்கிழமைகளில் டாஸ்மாக்  கடைகளில் மது விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன்படி, நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.57 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

அதேநேரத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.188.86 கோடி வசூலாகி இருந்தது. கடந்த 6 வாரங்களில் நேற்று ஒரேநாளில் அதிக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT