தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொழிற்சாலைகள் இயங்கும் பட்சத்தில், கரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி தொழிலதிபர்களிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.