ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கும்பொருட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர் தான் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.