திமுக தலைமையில் சென்னையில் புதன்கிழமை (ஏப். 15) அனைத்துக் கட்சிகள் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த்தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து விவாதிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.