சென்னை: அடுத்த மாதம் 6-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வியாழன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 06.10.2019 அன்று காலை 10 மணியளவில், திமுக பொதுக்குழுக் கூட்டமானது, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கில் நடைபெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் பல்வேறு நெருக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.