மூன்று புதிய சுற்றுலாக்கள்: தமிழக அரசு ஏற்பாடு

மூன்று புதிய சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 


மூன்று புதிய சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 
சென்னை முதல் குலசேகரப்பட்டினத்துக்கு புதிய சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று இந்தப் புதிய சுற்றுலா நடைபெறும். குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், மதுரை என மூன்று நாள்கள் சுற்றுலாவுக்கு ரூ.5,400 கட்டணம். இதேபோன்று, ஒவ்வொரு அமாவாசையை ஒட்டியும் மேல்மலையனூர் அம்மன் கோயிலுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பௌர்ணமியை ஒட்டி, திருவக்கரை வக்கரகாளி கோயிலுக்கு சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த சுற்றுலாத் திட்டங்கள் குறித்து விவரங்கள் அறிய 044- 25333333, 25333444, 25333857, 25333850-54 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 425 31111 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com