மகள் திருமண ஏற்பாடுகளுக்காக 28 ஆண்டுகால சிறை வாசத்துக்குப் பிறகு கடந்த ஜூலை 25ஆம் தேதி பரோலில் வெளியே வந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி, 51 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிறைக்கு திரும்பினார். எனினும், பரோல் காலத்தில் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்திட இயலாததால் நளினி வருத்தமடைந்திருப்பதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.