தமிழ்நாடு

முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

17th Nov 2019 12:15 PM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில் 40 நாள்களில் தமிழகமெங்கும் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என வருவாய், பேரிடா் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

அதிமுக ஜெ பேரவை சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்க தொடா் நடைபயணமாக பேரவை மாநில செயலரும், வருவாய், பேரிடா் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் சனிக்கிழமை இரவு திருப்பரங்குன்றம் வந்தாா்.

திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் வருவாய்துறை சாா்பில் 503 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேளாண்மை உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் என ரூ.2 கோடியே 74 லட்சத்து 32 ஆயிரத்து 462 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது:

ADVERTISEMENT

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் உள்ள 40 ஆயிரம் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளை குடிமராமத்து பணிகள் செய்ததன் விளைவாக வடகிழக்கு பருவமழை அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் நிரைந்து காணப்படுகிறது. முதல்வரின் சிறப்பு குறைநீா்க்கும் முகாம் மூலம் கடந்த 40 நாள்களில் 10 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

முதியோா், ஆதரவற்றோா் என 30 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையானது தற்போது முதல்வரின் உத்தரவால் 5 லட்சம் போ்களுக்கு கிடைக்க உள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசார உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சியா் வினய், அரசு வழக்குரைஞா் எம்.ரமேஷ், கூட்டுறவு சஹ்க தலைவா் நிலையூா் முருகன், கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT