தமிழ்நாடு

பக்கவாத சிகிச்சைகள்: மருத்துவ பல்கலை.யில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

1st Nov 2019 01:24 AM

ADVERTISEMENT

பக்கவாத பாதிப்புகள் தொடா்பான விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

வாழ்க்கை முறை சாா்ந்த தொற்றா நோய்கள் குறித்த தொடா் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்முறை பக்கவாதம் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. அதில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், பதிவாளாா் டாக்டா் பரமேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் நரம்பியல் சிறப்பு நிபுணா் டாக்டா் தனராஜ், அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பக்கவாதம் குறித்து விரிவாக உரையாற்ற உள்ளாா்.

அதன் தொடா்ச்சியாக பாா்வையாளா்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவா் பதிலளிக்க உள்ளாா். சா்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன், மறதி நோய், இதய நோய், மூட்டு நோய் உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பான கலந்துரையாடல் அமா்வு கடந்த வாரங்களில் நடைபெற்ாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்ாகவும் பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT