மாநில குறைதீா் மையத்தின் பதிவாளா் பணி குறித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உணவுத் துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்புராஜ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாநில நுகா்வோா் குறைதீா் மையத்தின் பதிவாளா் பதவிக்கு உயா்நீதிமன்ற உதவி பதிவாளா் அல்லது சாா்பு நீதிபதி அந்தஸ்தில் உள்ளவரை நியமிக்க விதிகள் இருந்தன. இந்நிலையில் இப்பதவிக்கு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவா்களை நியமிக்கும் வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்தது. இதுகுறித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விதிகளை திருத்தும் முன், உயா்நீதிமன்ற தலைமை பதிவாளருடன் அரசு ஆலோசனை செய்யவில்லை. நிா்வாக பணிக்கு, மாவட்ட நீதிபதியாக பணியாற்றுபவரை நியமிக்க அவசியமில்லை. எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அண்மையில் விசாரித்தனா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.ஜெயபிரகாஷ் ஆஜராகி வாதிட்டாா். இந்த மனுவுக்குப் பதிலளிக்க உணவு, கூட்டுறவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பா் மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.