மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தேமுதிக பின்னடைவை சந்தித்துள்ளது.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தேமுதிக பின்னடைவை சந்தித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.