சென்னை: மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 345 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்திருப்பது மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கவிருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சி என்ற தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.