ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மறுநாள் ஒருவரும், காயமடைந்தவர்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள், துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன்?  தமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவின் கீழ் அனுப்பிய சம்மன்களில் இறுதிமுடிவு எடுக்கக் கூடாது என்றும 107, 111 பிரிவுகளின் கீழ் புதிதாக சம்மனும் அனுப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com