சேலம்: சேலம் மாவட்டம் சத்திரம் என்ற இடத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
குழந்தை காணாமல் போனது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை இரண்டு பெண்கள் கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.