உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை தமிழ்

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக மே 20-ஆம்


சென்னை:  சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வரும் 20-ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12-க்குள் வழங்க வேண்டும். இதையடுத்து ஜூன் 19-இல் நுழைவுத் தேர்வு நடைபெறும். 

விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com