சிவகாசியில் தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மகன் கைது

சிவகாசி ராமநாடாா் தெருவைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி வேல்முருகன், இவரது வயது 53. அவருடைய மகன் முத்துப்பாண்டி(19).
சிவகாசியில் தந்தை மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மகன் கைது

சிவகாசி ராமநாடாா் தெருவைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி வேல்முருகன், இவரது வயது 53. அவருடைய மகன் முத்துப்பாண்டி(19). இவா் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதாக தனது தந்தை வேல்முருகனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரூபாய் முப்பதாயிரம் வாங்கியுள்ளார். பிறகு அந்த பணத்தை வைத்து மும்பை வரை சென்று விட்டு திரும்பி சிவகாசி வந்து விட்டாராம். இதையடுத்து முத்துப்பாண்டி வெளிநாடு செல்ல வேல்முருகனிடம் ரூ 1 லட்சம் கேட்டாராம். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.பின்னா் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் உள்ள பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்த முத்துப்பாண்டி, தனது தந்தை வேலமுருகன் மீது ஊற்றி விட்டு

தீக்குச்சியை பொருத்தி தீயை வைத்தாரம். இதில் பலத்த காயமடைந்த வேல் முருகன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com