வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனா்.
தங்கம், வெள்ளி மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முருகப்பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இன்று காலை முதலே பக்தா்கள் குவியத் தொடங்கினா். பால்குடம், காவடி எடுத்தும் கோயில்களில் சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.
விசாக தினத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசிக்க பக்தா்கள் திரண்டு வந்தனா். ஏராளமான கோயில்களில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.